தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காலை 11 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS 11 AM

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

By

Published : Sep 4, 2021, 10:45 AM IST

11AM
11AM

இந்தியா பதக்க வேட்டை: துப்பாக்கிச் சுடுதலில் தங்கம், வெள்ளி

பாரா ஒலிம்பிக்கில் இன்றும் இந்தியா தனது பதக்க வேட்டையை நிகழ்த்தியுள்ளது. அதன்படி, தலா ஒரு தங்கம், வெள்ளி பதங்கங்கள் கிடைத்துள்ளன.

ஒரே போட்டியில் தங்கம், வெள்ளி வென்ற இந்தியர்கள்: பிரதமர் வாழ்த்து

பாரா ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்தியாவுக்குப் பதக்கங்கள் வென்று கொடுத்த இரண்டு பேருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

பேருந்தில் ஆபத்தான முறையில் பயணித்த மாணவர்கள்

வேலூர் மாவட்டத்தில் பள்ளி செல்லும் மாணவர்கள், அரசுப் பேருந்தின் படிக்கட்டில் ஏறி நின்றவாறு ஆபத்தான முறையில் பயணித்துள்ளனர்.

போலி சான்றிதழ்: 4 ஊராட்சி செயலாளர்கள் பணிநீக்கம்

போலி கல்விச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக வேலூரில் நான்கு ஊராட்சி செயலாளர்களைப் பணிநீக்கம்செய்து அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (கிராம ஊராட்சி) உத்தரவிட்டுள்ளனர்.

மாப்பிள்ளை மீது அமிலம் வீச்சு: ஒருதலைக் காதலன் வெறிச்செயல்

திருப்பத்தூரில் உறவுக்கார பெண்ணிற்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை மீது ஆசிட் (அமிலம்) வீசிய ஒருதலைத் காதலனை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

பேரவைக் கூட்டத்தில் நலமுடன் பங்கேற்ற சபாநாயகர்

புதுச்சேரி சபநாயகர் செல்வம் தனது நலத்தின் மீது அக்கறைகொண்ட அனைவருக்கும் சட்டப்பேரவையில் நன்றி தெரிவித்தார்.

கேரளாவில் 11ஆம் வகுப்புத் தேர்வுகளை நிறுத்திவைக்க உத்தரவு

கேரளாவில் 11ஆம் வகுப்புத் தேர்வை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைக்க உத்தரவிட்டுள்ளது.

தடையை மீறி வைக்கப்பட்டிருந்த 21 விநாயகர் சிலைகளைக் கைப்பற்றிய காவல் துறை

தாம்பரத்தில் தடையை மீறி வைக்கப்பட்டிருந்ததாக 21 விநாயகர் சிலைகளை இந்து புரட்சி முன்னணி நிர்வாகி வீட்டிலிருந்து காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

சீக்கியர்களிடம் மன்னிப்பு கோரி காலணிகளைத் துடைத்த முன்னாள் முதலமைச்சர்!

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சித்துவை புகழ்ந்து உத்தரகாண்ட் முன்னாள் முதலமைச்சர் பேசிய வார்த்தைகள் சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், அதற்கு மன்னிப்பு கோரும் விதமாக குருத்வாராவில், தரை, காலணிகளை அவர் தூய்மைப்படுத்தும் வீடியோ வெளியாகியுள்ளது.

இழந்த பிறகுதான் அருமை தெரிகிறது - கண்கலங்கிய விஜய் சேதுபதி

மறைந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் குறித்து நடிகர் விஜய் சேதுபதி, மேடையில் கண்கலங்கி பேசியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details