மத்தியப் பிரதேசத்தில் இ-டெண்டர் மோசடியில் தொடர்புடையதாக ஒஸ்மோ ஐடி சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவன அலுவலகத்தில், அமலாக்கத் துறையினர் திடீரென சோதனை நடத்தினர்.
ம.பி. டெண்டர் மோசடி: ஒஸ்மோ நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை!
போபால்: இ-டெண்டர் சம்பந்தப்பட்ட முறைகேடு வழக்கில், பிரபல ஐடி நிறுவனத்தில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
போபால்
இந்தச் சோதனையில் முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடித்த இந்தச் சோதனையில், யாரும் கைதுசெய்யப்படவில்லை.
இந்நிறுவனத்தின் மூன்று இயக்குநர்கள் - வினய் சவுத்ரி, வருண் சதுர்வேதி, சுனித் வோல்வல்கர் ஆகியோர் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்குத் தொடர்பாக 16-க்கும் மேற்பட்ட வெவ்வேறு இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.