தமிழ்நாடு

tamil nadu

பாரமுல்லாவில் வீழ்த்தப்பட்ட 2 பயங்கரவாதிகள்

By

Published : Aug 24, 2021, 10:26 AM IST

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் பயங்கரவாதிகள் இருவரைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

Militant killed
Militant killed

ஜம்மு காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோப்பூர் பகுதியில் இன்று பாதுகாப்புப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் வெடித்தது.

இந்த மோதலில் ஒரு பயங்கரவாதி சுட்டு வீழ்த்தப்பட்டார். பாதுகாப்புப் படையினருக்குத் துப்பின்பேரில் இந்த ரோந்துப் பணியை மேற்கொண்டதாக காவல் துறை அலுவலர் தெரிவித்திருந்தார்.

சோதனையின்போது பயங்கரவாதிகள் கையும் களவுமாக மாட்டிக்கொண்ட நிலையில், அவர்கள் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுக்க பயங்கரவாதிகள் இருவர் சம்பவயிடத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

என்கவுன்டர் குறித்து காஷ்மீர் போலீஸ்

உயிரிழந்த இருவரும் பல்வேறு முக்கிய வழக்குகளில் தேடப்பட்டுவந்தவர்கள் எனக் காவல் துறை தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவயிடத்திலிருந்து தப்பியோடிய நபர்களைப் பாதுகாப்புப் படையினர் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க:தெலங்கானாவில் கல்வி நிறுவனங்கள் செயல்பட அனுமதி

ABOUT THE AUTHOR

...view details