ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் பயங்கரவாதிகளை என்கவுன்ட்டர் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த 4-ம் தேதி பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி நிசர் கான்டெ சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த என்கவுன்ட்டர் நடந்த பகுதியில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதால், பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
மீண்டும் என்கவுன்ட்டர் தொடங்கிவிட்டது - பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை! - பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே மோதல்
பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபூர் பானிபோரா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் தொடங்கியுள்ளது.
![மீண்டும் என்கவுன்ட்டர் தொடங்கிவிட்டது - பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை! Encounter](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-15490652-438-15490652-1654533955638.jpg)
Encounter
இந்த நிலையில், வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபூர் பானிபோரா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பானிபோராவில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி தாக்குதல் நடந்ததில் , பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: இந்தியாவில் முதல்முறையாக புல்லட் ரயில் சேவை 2026இல் தொடக்கம்!