தமிழ்நாடு

tamil nadu

சோபியானில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

By

Published : Oct 2, 2022, 1:45 PM IST

Updated : Oct 2, 2022, 2:47 PM IST

ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.

Encounter
Encounter

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாஸ்குச்சான் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பாதுகாப்புப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, மறைந்திருந்த பயங்கவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதற்கு வீரர்களும் பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். முதல்கட்ட தகவலில் கொல்லப்பட்ட பயங்கரவாதி சோபியானில் உள்ள நவ்போரா பாஸ்குசானைச் சேர்ந்த நசீர் அகமது பட் என்பதும் அவர் லஷ்கர் இடி பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்துள்ளது.

Last Updated : Oct 2, 2022, 2:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details