தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

2 கிலோ தங்கம், ரூ.3கோடி ரொக்கம்- சிக்கலில் டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின்! - டெல்லி

டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் உறவினர்கள் வீட்டில் அமலாக்கத்துறை அலுவலர்கள் நடத்திய சோதனையில் 1.8 கிலோ தங்கம் மற்றும் ரூ.2.8 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Satyendar Jain
Satyendar Jain

By

Published : Jun 8, 2022, 6:37 AM IST

புதுடெல்லி: டெல்லி சுகாதாரத் துறை அமைச்சராக இருப்பவர் சத்யேந்தர் குமார் ஜெயின். இவர் மீது சட்டவிரோத பணப் பரிமாற்ற புகார் எழுந்தது. இந்தப் புகார் மீது அமலாக்கத்துறை அலுவலர்கள் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) அலுவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்த நிலையில், 2018ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி சத்யேந்தர் ஜெயின் மீது சிபிஐ அலுவலர்கள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்தக் குற்றப் பத்திரிகையில், அமைச்சர் சத்தேயந்தர் குமார் ஜெயின், அவரின் மனைவி பூணம் ஜெயின், அஜித் பிரசாத், சுனில் குமார் ஜெயின், வைபவ் ஜெயின் மற்றும் அங்குஷ் ஜெயின் உள்ளிட்டோரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன.

தொடர்ந்து சத்யேந்தர் ஜெயின் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகிறார். இதற்கிடையில் சத்யேந்தர் ஜெயின் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனை நடத்தினார்கள். இந்தச் சோதனையின் முடிவில், 1.8 கிலோ தங்கம் மற்றும் ரூ.2.8 கோடி ரொக்கம் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் கைது!

ABOUT THE AUTHOR

...view details