தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அருணாச்சலப் பிரதேசத்தில் நிலஅதிர்வு - அருணாச்சலப் பிரதேசத்தில் நிலஅதிர்வு

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள பன்கிங் பகுதியில் நிலஅதிர்வு உணரப்பட்டது.

Earthquake
Earthquake

By

Published : Feb 7, 2022, 8:26 AM IST

சியாங் : அருணாச்சலப் பிரதேசத்தின் பங்கின் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.6) லேசான நிலஅதிர்வு உணரப்பட்டது. இது, ரிக்டர் அளவுக்கோலில் 4.3 எனப் பதிவாகியுள்ளது.

இந்த நிலஅதிர்வு நள்ளிரவு 10.59 மணிக்கு ஏற்பட்டுள்ளது. இது குறித்து இந்திய தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் விடுத்துள்ள செய்தியில், “அருணாச்சலப் பிரதேசத்தின் பங்கின் பகுதியில் சரியாக இந்திய நேரப்படி 22.59.17 மணிக்கு 305 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலஅதிர்வு ஏற்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நில அதிர்வு காரணமாக யாருக்கும் பாதிப்பில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தான்-தஜிகிஸ்தான் நாடுகளின் எல்லையில் நிலஅதிர்வு ஏற்பட்டது.

இந்த நிலஅதிர்வு ஜம்மு காஷ்மீர், நொய்டா மற்றும் ஹரியானா மாநிலத்தின் சில பகுதிகளில் உணரப்பட்டது என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : Tremors Felt in Jammu: ஜம்மு காஷ்மீர், நொய்டாவில் நிலஅதிர்வு!

ABOUT THE AUTHOR

...view details