கொழும்பு :தென்கிழக்கு இலங்கை கடற்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. தலைநகர் கொழும்புவில் இருந்து ஆயிரத்து 326 கிலோ மீட்டர் தொலைவில் தென் கிழக்கு இலங்கை கடற்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது. 6 புள்ளி 2 என்ற ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடற்பரப்பில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது.
இலங்கை கடற்பகுதியில் திடீர் நிலநடுக்கம்! தமிழகத்திற்கு சுனாமி எச்சரிக்கையா?
கொழும்பு கடற்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தென் கிழக்கு இலங்கை கடற்பகுதியில் 6 புள்ளி 2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவான நிலையில் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
Published : Nov 14, 2023, 1:33 PM IST
|Updated : Nov 14, 2023, 1:40 PM IST
Earthquake
மதியம் 12.31 மணிக்கு இந்த நில நடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நில அதிர்வால் தமிழகத்திற்கு பாதிப்பு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க :கேரளாவில் சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு! மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!
Last Updated : Nov 14, 2023, 1:40 PM IST