தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சபரிமலையில் கட்டுகடங்காத கூட்டம்.. வாகனங்கள் பம்பைக்கு செல்ல தடை... எருமேலியில் சாலை மறியல் - நடவடிக்கை என்ன? - news about in Sabarimala issue

Sabarimala Pilgrims: பம்பைக்குச் செல்ல பக்தர்களின் வாகனங்கள் அனுமதிக்கப்படாததால், ஐயப்ப பக்தர்கள் நேற்று இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பக்தர்களின் வாகனங்கள் பம்பைக்கு செல்ல தடை
பக்தர்களின் வாகனங்கள் பம்பைக்கு செல்ல தடை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 13, 2023, 1:34 PM IST

பக்தர்களின் வாகனங்கள் பம்பைக்கு செல்ல தடை

கேரளா: ஆண்டுதோறும் கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் ஐயப்ப பக்தர்கள் மாலையிட்டு, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்வர். கேரளா மட்டுமல்லாமல் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்குச் செல்வர். இந்த நிலையில் மண்டல மகர விளக்கு பூஜைகளை முன்னிட்டு, கடந்த நவம்பர் 16ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆனால், கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் குவியத் தொடங்கியுள்ளது. இதனால் கோயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, பக்தர்களின் வாகனங்கள் பம்பைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பக்தர்களின் வாகனங்களை பம்பைக்குச் செல்ல அனுமதிக்க கோரி, நேற்று இரவு (டிச.12) எருமேலியில் ஐயப்ப பக்தர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பம்பையில் இருந்து வாகனங்களை அனுமதிக்க உத்தரவு வந்தால் மட்டுமே வாகனங்களை விட முடியும் என்று போலீசார் கூறியுள்ளனர். தேவஸ்தவம அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில், சபரிமலை பிரச்னைகள் நேற்று இரவுக்குள் தீர்ந்துவிட்டதாகவும், நீதிமன்ற உத்தரவின்படி பக்தர்கள் வருகைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஸ்ரீபெரும்புதூர் பெருமாள் கோயிலில் சாமி தரிசனம்!

ABOUT THE AUTHOR

...view details