டெல்லி:கடந்த ஜூலை 18அன்று நடந்த குடியரசுத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட திரெளபதி முர்மு அவரை எதிர்த்து போட்டியிட்ட யஷ்வந்த் சின்ஹாவை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற வேட்பாளர் திரெளபதி முர்மு இன்று (ஜூலை 25) குடியரசுத் தலைவராக பதவியேற்றார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர், மாநில ஆளுநர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
டெல்லியில் உள்ள பாராளுமன்ற மைய மண்டபத்தில் திரெளபதி முர்முவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து பாரம்பரிய முறையில் ஊர்வலமாக வந்து பதவியேற்றார்.
குடியரசுத் தலைவர் உரை: இதனையடுத்து நாட்டின் குடியரசுத் தலைவராக அவரது முதல் உரையை ஆற்றினார். அதில் விழாவிற்கு வந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். குடியரசுத் தலைவராக பதவியேற்றது பெருமையளிக்கிறது. நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவாரானது மகிழ்ச்சி அளிக்கிறது.