தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆந்திராவில் களைக்கட்டிய கழுதை ஓட்டப்பந்தயம்! - ஆனந்த்பூர் ஆந்திர பிரதேசம்

ஆந்திர மாநிலம் அனந்த்பூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடேஸ்வரா கோயில் திருவிழாவில் கழுதை ஓட்டப்பந்தயம் போட்டி நடைபெற்றது.

களைகட்டிய கழுதை ஓட்டப்பந்தயம்! - கரோனா தடை நீங்கியதால் போட்டியாளர்கள் உற்சாகம்!
களைகட்டிய கழுதை ஓட்டப்பந்தயம்! - கரோனா தடை நீங்கியதால் போட்டியாளர்கள் களைகட்டிய கழுதை ஓட்டப்பந்தயம்! - கரோனா தடை நீங்கியதால் போட்டியாளர்கள் உற்சாகம்!உற்சாகம்!

By

Published : Apr 23, 2022, 5:35 PM IST

ஆனந்த்பூர்(ஆந்திர பிரதேசம்):ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள அனந்த்பூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ஜனார்த்தன வெங்கடேஸ்வரா சுவாமி கோயிலில் புகழ்பெற்ற ரத்தோச்சவம் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவின் ஒருபகுதியாக கழுதை ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இந்த ஓட்டப்பந்தயத்தில் கழுதையின் உரிமையாளர்கள் கழுதை மேலே ஏறி விரட்டி சென்றனர்.

கரோனா ஊரடங்கால் தடைபட்ட கழுதை சவாரி இந்த ஆண்டு வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்தப் பந்தயத்தில் தார் சாலையில் 18 கிமீ தூரம் ஓடி முதலாவதாக இலக்கை அடையும் கழுதையே வெற்றி பெற்றதாகும். இந்தப் பந்தயத்திற்கு சுற்றுவட்டார மாவட்டங்களிலிருந்தும் பலர் பங்கேற்பதற்காக வந்திருந்தனர். பந்தயத்தில் வென்ற வெற்றியாளர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது.

களைகட்டிய கழுதை ஓட்டப்பந்தயம்! - கரோனா தடை நீங்கியதால் போட்டியாளர்கள் உற்சாகம்!

இரண்டு வருடங்களுக்கு பின் பந்தயம் நடைபெறுவதால் பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். வஜ்ராகர்பூரில் இருந்து 9 கிமீ தொலைவு சென்று பின் அங்கிருந்து திரும்பி 9 கிமீ தொலைவை தாண்டி மீண்டும் வஜ்ராகபூரை வந்தடைய வேண்டும். இந்த பந்தயத்தை பலர் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

பந்தயத்தில் வென்ற வெற்றியாளர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது

இதையும் படிங்க:சமயபுரம் மாரியம்மன் சித்திரை தெப்பத்திருவிழா!

ABOUT THE AUTHOR

...view details