தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தாய்ப்பால் குடிக்காத குழந்தை - மருத்துவர் எடுத்த விபரீத முடிவு - கர்நாடகாவில் மருத்துவர் தற்கொலை

மைசூருவில் மருத்துவர் ஒருவரின் குழந்தை  தாய்ப்பால் குடிக்காத காரணத்தினால் அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவர் செய்த செயல்
மருத்துவர் செய்த செயல்

By

Published : Jan 11, 2022, 5:23 PM IST

கர்நாடகா: மைசூரு பகுதியிலுள்ள குண்டுராவ் நகரில் வசித்துவருபவர் மருத்துவர் அர்பிதா. இவருக்கு மருத்துவர் ஒருவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் திருமணமாகி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இம்மருத்துவர் தம்பதிக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. இதனிடையே மருத்துவரின் ஒன்பது மாத குழந்தை கடந்த சில நாள்களாக, சரியாகத் தாய்ப்பால் குடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் மிகுந்த மன உளைச்சலிலிருந்த மருத்துவர் நேற்று (ஜனவரி 10) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவலர்கள், அர்பிதா உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். தனது குழந்தை தாய்ப்பால் குடிக்காத காரணத்தினால், மருத்துவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:உ.பி.யில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

ABOUT THE AUTHOR

...view details