இந்தியாவில் ஆங்கிலேயரின் வருகைக்குப்பின் தான், ஆங்கில ஆண்டு முறை வழக்கத்திற்கு வந்தது. அதற்குமுன் பல ஆண்டு முறைகள் இருந்தாலும், தற்போது இந்தியா முழுவதும் ஆங்கில ஆண்டு முறைதான் முறைப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோல உலகின் பல நாடுகளிலும் பல வகையான காலண்டர் முறை பின்பற்றப்பட்டது. இதுபோல பின்பற்றப்பட்ட காலண்டர்களின் படி 16ஆம் நூற்றாண்டு வரை ஏப்ரல் முதல் நாளே புத்தாண்டாக கொண்டாடப்பட்டது.
பின்னர் 1562ஆம் ஆண்டில் இருந்த போப் ஆண்டவரான 13ஆவது கிரேகரி பழைய ஜூலியன் காலண்டரை விடுத்து புதிய கிரேகரியன் காலண்டரை கொண்டு வந்தார். அதன்படி ஜனவரி 1 அன்று புத்தாண்டு தினம் கொண்டாடப்படுகிறது. இந்த வழக்கத்தை ஏற்றுக்கொள்ள சில காலங்கள் ஆனது.
இந்தப் புதிய காலண்டரை பிரான்ஸ் 1852ஆம் ஆண்டும், ஸ்காட்லாந்து 1660ஆம் ஆண்டும் மற்றும் இங்கிலாந்து 1752ஆம் ஆண்டும் ஏற்றுக்கொண்டன. இதனை தாமதமாக ஏற்றுக்கொண்ட நாடுகள் ஏப்ரல் முதல் நாள் அன்றே புத்தாண்டாக கொண்டாடினார்கள். அவர்களைக் கேலி செய்த மற்ற நாடுகள் அந்த தினத்தை முட்டாள்கள் தினம் என அழைக்கத் தொடங்கியிருந்தனர்.