தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் மத்திய அரசு - கதிர் ஆனந்த் எம்பி - மத்திய அரசு மாநிலங்களின் உரிமை பறித்து வஞ்சனை செய்கிறது - துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த்

வரவு செலவுத் திட்ட அறிக்கையில் எந்த நலத்திட்டமும் இல்லை, வட இந்தியாவுக்கு ஏராளமான நிதி ஒதுக்கப்படுகிறது, தென்னிந்தியாவுக்கு வஞ்சனை மட்டுமே செய்யப்படுகிறது. நீட் விவகாரத்தில் மத்திய அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார். மத்திய அரசு மாநிலங்களின் உரிமையைப் பறித்து மக்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது என துரைமுருகன் மகன் திமுக எம்பி கதிர் ஆனந்த் விமர்சித்துள்ளார்.

மத்திய அரசு மாநிலங்களின் உரிமை பறித்து வஞ்சனை செய்கிறது - துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த்
மத்திய அரசு மாநிலங்களின் உரிமை பறித்து வஞ்சனை செய்கிறது - துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த்

By

Published : Feb 10, 2022, 11:12 AM IST

Updated : Feb 21, 2022, 12:57 PM IST

டெல்லி: நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல்செய்யப்பட்டுள்ள நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று (பிப்ரவரி 9) மக்களவையில் கதிர் ஆனந்த் உரையாற்றியுள்ளார்.

மத்திய அரசு மாநிலங்களின் உரிமை பறித்து வஞ்சனை செய்கிறது - துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த்

அதில் அவர், "இந்த பட்ஜெட்டில் எந்த நலத்திட்டமும் இல்லை. வட இந்தியாவுக்கு ஏராளமான நிதி ஒதுக்கப்படுகிறது தென்னிந்தியாவுக்கு வஞ்சனை மட்டுமே செய்யப்படுகிறது. பட்ஜெட்டில் மத்திய அரசு பொதுமக்களுக்கு எதுவுமே செய்யவில்லை, அவர்களுக்கு பட்ஜெட்டில் எந்த நிதியும் ஒதுக்கவில்லை.

நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான நிதி குறைக்கப்பட்டது மூலம், அதனைச் சார்ந்து இருக்கக்கூடிய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவிப்புகள் எல்லாமே காகிதத்தில் மட்டுமே உள்ளது. நடைமுறையில் ஏதும் செயல்படுத்தப்படுவதில்லை.

விவசாயிகளுக்கு அறிவித்த எந்த ஒரு திட்டத்தையும் இந்த அரசு இதுவரை உருப்படியாகச் செய்யவில்லை. தொடர்ந்து விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாகி வருவதாகக் கூறும் மத்திய அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை, இது விவசாயிகளுக்கு எதிரான பட்ஜெட்" என்றார்.

நீட் விவகாரத்தில் மத்திய அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார். மத்திய அரசு மாநிலங்களின் உரிமை பறித்து மக்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது என விமர்சித்துள்ளார்.

'நீ உட்காருப்பா முதல்ல...' கர்நாடக பாஜக எம்.பி.க்களுக்கு எதிராக மக்களவையில் சீறிய சு.வெங்கடேசன்!

Last Updated : Feb 21, 2022, 12:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details