தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காவல்துறையினரிடம் கர்நாடக சட்ட மேலவை துணைத் தலைவரின் தற்கொலை குறிப்பு! - எஸ்.எல். தர்மே கவுடா

கர்நாடக சட்டமேலவையின் துணை தலைவரும், மதசார்பற்ற ஜனதா தளத்தின் மேலவை உறுப்பினருமான எஸ்.எல். தர்மே கவுடா நேற்று(டிச.29) தற்கொலை செய்துகொண்டார்.

கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா
கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா

By

Published : Dec 30, 2020, 9:23 AM IST

பெங்களூரு: கர்நாடக சட்ட மேலவையின் துணை தலைவரின் தற்கொலைக் குறிப்பை சிக்கமகளூரு காவல்துறையினர் வைத்திருக்கிறார்கள் என்று கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் சிக்மகளூரில் நேற்று(டிச.29) கர்நாடக சட்டமேலவையின் துணை தலைவரும், மதசார்பற்ற ஜனதா தளத்தின் மேலவை உறுப்பினருமான எஸ்.எல். தர்மே கவுடா தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, கவுடா விட்டுச்சென்ற நீண்ட மரணக் குறிப்பை சிக்கமகளூரு மாவட்ட நிர்வாகம் மீட்டுள்ளது.

அதில் அவரது சொத்து மற்றும் பல முக்கியமான தனிப்பட்ட விவரங்கள் உள்ளன. எனவே, இந்த நேரத்தில் அதன் உள்ளடக்கங்களை நாங்கள் வெளிப்படுத்தவில்லை" என்றார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை முடித்தவுடன், கவுடாவின் மரணக் குறிப்பின் உள்ளடக்கங்கள் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

கவுடாவின் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக பேசிய பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி, " சட்டமேலவையில் நடைபெற்ற சம்பவத்தால் கவுடா வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை. அன்றைய தினமே கடவுடாவை தொடர்புக்கொண்டு பேசினேன்.

ஆனால் அவர் எந்த வருத்தத்தையும் வெளிகாட்டவில்லை. அவர் ஏன் இவ்வளவு மோசமான முடிவை எடுத்தார் என்று எனக்குத் தெரியவில்லை," என்று கூறினார். கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி கர்நாடக விதான பரிஷத் (கவுன்சில்) அமர்வில், அதன் தலைவர் கே. பிரதாப சந்திர ஷெட்டிக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவை உறுப்பினர்கள் எஸ்.எல்.தர்மே கவுடாவை நற்காலியிலிருந்து கீழே இழுத்துத் தள்ளியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கர்நாடக சட்ட மேலவை துணைத் தலைவர் தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details