தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 4, 2020, 5:57 PM IST

ETV Bharat / bharat

‘மழைநீர் தேக்கம்: போட்டாவுக்கு போஸ் கொடுக்கும் முதலமைச்சர்’ - துணை சபாநாயகர் குற்றச்சாட்டு

புதுச்சேரி: தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் வேலையை ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் செய்வதாக துணை சபாநாயகர் பாலன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மழையால் பாதிக்கப்பட்ட பகுதியை ஆய்வு செய்த துணை சபாநாயகர் பாலன்
மழையால் பாதிக்கப்பட்ட பகுதியை ஆய்வு செய்த துணை சபாநாயகர் பாலன்

புதுச்சேரியில் கடந்த மூன்று நாள்களாகத் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. குறிப்பாக உழவர்கரை தொகுதிக்குள்பட்ட பூமியாம்பேட்டை முழுவதும் மழைநீரால் மூழ்கியுள்ளது.

இப்பகுதியினை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், துணை சபாநாயகருமான பாலன் பார்வையிட்டு மழைநீரை அகற்றுவதற்கான நடவடிக்கையை எடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சட்டப்பேரவை உறுப்பினருக்கான மேம்பாட்டு நிதி ஒரு கோடி ரூபாய் மட்டுமே வழங்குவதால் இதுபோன்ற பேரிடர் காலத்தில் நிவாரண பணிகளுக்கும் மழைநீரை அகற்றுவதற்கும் நிதி போதவில்லை.

மழையால் பாதிக்கப்பட்ட பகுதியை ஆய்வு செய்த துணை சபாநாயகர் பாலன்

ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று வேடிக்கை பார்த்தவிட்டு, புகைப்படம் எடுக்கிறார்களே தவிர நீண்டகாலம் நடவடிக்கையில் இறங்குவதில்லை” எனக் குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க: ’விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறார் மோடி’-நாராயணசாமி!

ABOUT THE AUTHOR

...view details