தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லியில் தடுப்பூசி பற்றாக்குறை: 18-44 வயதினருக்கு இனி தடுப்பூசி இல்லை! - இந்தியாவில் தடுப்பூசி திட்டம்

தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தலைநகர் டெல்லியில் 18 முதல் 44 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன.

Arvind Kejriwal
Arvind Kejriwal

By

Published : May 22, 2021, 9:05 PM IST

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மாநிலத்தில் நடைபெற்று வரும் தடுப்பூசித் திட்டம் குறித்து பேச செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "டெல்லியில் 18-44 வயதினருக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.

வயது வந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த டெல்லிக்கு 2.5 கோடி டோஸ்கள் தேவைபடுகின்றன. எனவே, டெல்லிக்கான ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும் என மாநில அரசு சார்பில் கேட்டுக்கொள்கிறேன். மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்த 80 லட்சம் டோஸ்கள் தேவை. ஆனால் மே மாதம் 16 லட்சம் டோஸ்கள்தான் கிடைத்துள்ளன.

இந்தியாவில் தட்டுபாடு நிலவும்பட்சத்தில் வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு அரசு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும்" என அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க:’பாபா ராம்தேவ்வுக்கு எதிராக பேரிடர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுங்கள்’ - இந்திய மருத்துவக் கூட்டமைப்பு

ABOUT THE AUTHOR

...view details