டெல்லி: 250 வார்டுகளைக் கொண்ட டெல்லி மாநகராட்சிக்கு கடந்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையில் 134 வார்டுகளை கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி, 15 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக பா.ஜ.கவிடம் இருந்த டெல்லி மாநகராட்சியை தட்டிப் பறித்தது.
மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான தேர்தல் நடத்துவதற்கு முன்னதாக மாநகராட்சியின் தற்காலிக சபாநாயகராக பா.ஜ.க.வின் சத்ய சர்மா நியமிக்கப்பட்டது மற்றும் அரசின் ஆலோசிக்காமல் 10 நியமன கவுன்சிலர்களை நியமித்தது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக துணை நிலை ஆளுநர் சக்சேனா மற்றும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இடையே மோதல் போக்கு நிலவுகிறது.
உள்ளாட்சி தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தால், மேயர் தேர்தலில் வெற்றி பெற துணை நிலை ஆளுநர் செயல்படுவதாகவும் அதற்காக ஆல்டர்மேன் என்று அழைக்கப்படும் இந்த நியமன உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளதாகவும் ஆம் ஆத்மி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.