புதுடெல்லி: தேசிய தலைநகர் டெல்லியை ஆளும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் ஆளுநர் அனில் பைஜாலுக்கும் இடையே அவ்வப்போது முரண்கள் ஏற்படுவதுண்டு. வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டத்தை கூட ஆளுநர் நிறுத்திவைத்துள்ளார் என அண்மையில் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதற்கிடையில் டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் (Anil Baijal) ஆளுநர் பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான, தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு அனுப்பியுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.