டெல்லி: பிரபல பாலிவுட் நட்சத்திர தம்பதி அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் தம்பதியரின் மகள் ஆராத்யா (11). பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனின் பேத்தி. இந்நிலையில் ஆராத்யா தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த 19ம் தேதி மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், " நான் உடல் நலம் குன்றியிருப்பது போல சில யூ-டியூப் சேனல்களில் வீடியோக்கள் மற்றும் தகவல்கள் பகிரப்பட்டுள்ளன. இதுபோன்ற போலியான செய்திகளை வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலியான வீடியோக்களை நீக்க உத்தரவிட வேண்டும்" என வலியுறுத்தியிருந்தார்.
இந்த மனு இன்று (ஏப்ரல் 20) நீதிபதி ஹரி சங்கர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வாதங்களைக் கேட்ட நீதிபதி, "9 யூ-டியூப் சேனல்களுக்கு தடை விதிக்கிறேன். ஆராத்யாவின் உடல் நலம் தொடர்பான எந்த தகவலையும் பொது தளத்தில் வெளியிடக் கூடாது. ஒரு பிரபலத்தின் குழந்தையாக இருந்தாலும், சாமானியர்களின் குழந்தையாக இருப்பினும் ஒவ்வொரு குழந்தைகளும் மரியாதைக்கு உரியவர்கள் ஆவர்.