லூதியானா : பஞ்சாப்பில் உள்ள உணவகத்தில் ஆர்டர் செய்யப்பட்ட மட்டன் உணவில் எலி இறந்து கிடக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
பஞ்சாப், லூதியானா மாவட்டத்தில் உள்ள தாபாவில் மட்டன் உணவு ஆர்டர் செய்தவருக்கு, இறந்த எலியை சமைத்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
லூதியானா, ஜாக்ரான் மேம்பாலம் உள்ள பகுதியில் பிரகாஷ் தாபா உள்ளது. அந்த தாபாவிற்கு சென்ற ஒரு குடும்பத்தினர் சாப்பாடு மற்றும் மட்டன் உணவு ஆர்டர் செய்து உள்ளனர். சாப்பாடு மற்றும் மட்டன் உணவு அவர்களுக்கு பரிமாறப்பட்ட நிலையில், அதில் இறந்த எலி வறுக்கப்பட்ட எலி கிடந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அவர்கள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் வறுக்கப்பட்ட எலியை மட்டன் உணவில் கலந்து கொடுத்ததாக கூறி வீடியோ வெளியிட்டு உள்ளனர். இந்நிலையில், வீடியோ டிரெண்டாகி பல்வேறு கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. வைரல் வீடியோ குறித்து பேசிய கடையின் உரிமையாளர், "கடந்த பல ஆண்டுகளாக தாபாவை நடத்தி வருவதாகவும், உணவக சமயலறையில் சுத்தமான மற்றும் சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்பட்டு பரிமாறப்பட்டு வருவதாகவும் கூறினார்.