தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புத்தாண்டை முன்னிட்டு கெடுபிடி விதிக்கும் மத்திய அரசு

டெல்லி: புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது மக்கள் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார்.

By

Published : Dec 30, 2020, 5:15 PM IST

புத்தாண்டு
புத்தாண்டு

புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது கரோனா பரவலை தடுக்கும் வகையில் மக்கள் கூடுவதை தவிர்த்து நிகழ்ச்சிகளை திவீரமாக கண்காணிக்க வேண்டும் என அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார்.

மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம்

இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளயிட்டுள்ள அறிக்கையில், "பெரிய அளவில் கரோனா பரவலை தடுக்கும் வகையில் மக்கள் கூடுவதை தவிர்த்து புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெருந்தொற்று பரவலை தடுக்க மாநிலத்தில் நிலவும் சூழலை கருத்தில் கொண்டு இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மாநில, யூனியன் பிரதேச அரசுகள் விதிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதேபோல், டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் உள்ளூர் சூழலை கருத்தில் கொண்டு கட்டுப்பாடு விதிக்கலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

அதிகரிக்கும் உருமாறிய கரோனா பரவல்

பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பிய 20 பேர், மரபணு மாற்றமடைந்த உருமாறிய கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 107 மாதிரிகள் மரபணு வகைப்படுத்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

விமான சேவை ரத்து நீட்டிப்பு

இதற்கிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரிட்டனிலிருந்து இந்தியா வரும் விமானங்களுக்கு டிசம்பர் 31ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த தடையை ஜனவரி 7ஆம் தேதிவரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details