தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 25, 2020, 2:12 PM IST

ETV Bharat / bharat

இந்தியாவில் கரோனா பாதிப்பு நிலவரம்

டெல்லி : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23 ஆயிரத்து 67 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

COVID-19
COVID-19

இந்தியாவில் அனைத்துப் பகுதிகளிலும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை மூன்று லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. இந்நிலையில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, குணமடைந்தோரின் எண்ணிக்கை ஆகியவற்றை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்த தகவல்கள் பின்வருமாறு:

கரோனா வைரசால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23 ஆயிரத்து 67 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியே ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 845ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பால் நேற்று (டிச. 24) ஒரேநாளில் 336 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 92ஆக அதிகரித்துள்ளது. இதனால் உயிரிழப்பு 1.45 விழுக்காடாகக் குறைந்துள்ளது.

இதுவரை கரோனாவிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 97 லட்சத்து 17 ஆயிரத்து 834ஆக அதிகரித்துள்ளது. இதனால் குணமடைந்தோரின் விகிதம் 95.77 விழுக்காடாக அதிகரித்துள்ளது. மேலும் கரோனா தொற்றுக்கு ஆளாகி இரண்டு லட்சத்து 81 ஆயிரத்து 919 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இதுவரை மொத்தமாக 16 கோடியே 63 லட்சம் ஐந்தாயிரத்து 762 நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று (டிச. 24) மட்டும் ஒன்பது லட்சத்து 97 ஆயிரத்து 396 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தையும், 23 ஆம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5ஆம் தேதி 40 லட்சத்தையும் எட்டியது. செப்டம்பர் 16ஆம் தேதி 50 லட்சத்தையும், 28ஆம் தேதி 60 லட்சத்தையும், அக்டோபர் 11ஆம் தேதி 70 லட்சத்தையும் எட்டியது. 29ஆம் தேதி 80 லட்சத்தையும், நவம்பர் 20ஆம் தேதி 90 லட்சத்தையும் , டிசம்பர் 19ஆம் தேதி ஒரு கோடியையும் கடந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details