தமிழ்நாடு

tamil nadu

இந்தியாவில் 1 கோடியே 2 லட்சத்தை தாண்டிய கோவிட்-19 பாதிப்பு

By

Published : Dec 28, 2020, 2:24 PM IST

கடந்த 24 மணிநேரத்தில் 20 ஆயிரத்து 21 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் 279 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

COVID-19
COVID-19

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கோவிட்-19 தாக்கம் குறைந்துவருகிறது. கேரளா, கோவா மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் கோவிட்-19 பாதிப்பு பாசிட்டிவிட்டி அளவு 5 விழுக்காட்டிற்கும் குறைவாகவே உள்ளது.

இந்நிலையில், நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 20 ஆயிரத்து 21 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் 279 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கோவிட் - 19 தற்போதைய நிலவரம்

இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியே இரண்டு லட்சத்தை கடந்துள்ளது. இதுவரை மொத்தம் ஒரு கோடியே இரண்டு லட்சத்து ஏழாயிரத்து 871 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டு லட்சத்து 77 ஆயிரத்து 301 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 901 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 49 ஆயிரத்து 255 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் 12 ஆயிரத்து 69 பேர், அடுத்தபடியாக கர்நாடகாவில் 12 ஆயிரத்து 62 பேர், டெல்லியில் 10 ஆயிரத்து 811 பேர் உயிரிழந்துள்ளனர்.

பரிசோதனை நிலவரம்

கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இன்று (டிச. 28) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 7 லட்சத்து 15 ஆயிரத்து 397 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டுள்ளதாகவும், இதுவரை மொத்தமாக சுமார் 16 கோடியே 88 லட்சத்து 18 ஆயிரத்து 054 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பிகார் அரசுக்கு ‘டிஜிட்டல் இந்தியா’ விருது!

ABOUT THE AUTHOR

...view details