தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 8, 2021, 10:23 AM IST

ETV Bharat / bharat

கரோனாவால் ஒரே நாளில் 4,187 பேர் பலி

ஒரே நாளில் கரோனா பாதிப்பால் 4,187 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

COVID-19
கரோனா

இந்தியாவில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நான்கு லட்சத்து ஆயிரத்து 78 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 18 லட்சத்து 92 ஆயிரத்து 676ஆக அதிகரித்துள்ளது.

குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில் அதிகளவிலான கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதேபோல், நேற்று (மே.7) கரோனாவால் பாதிக்கப்பட்ட 4,187 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 38 ஆயிரத்து 270 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியே 79 லட்சத்து 30 ஆயிரத்து 960ஆக உள்ளது. தற்போது, 37 லட்சத்து 23 ஆயிரத்து 446 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தமாக 16 கோடியே 73 லட்சத்து 46 ஆயிரத்து 544 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

ABOUT THE AUTHOR

...view details