தமிழ்நாடு

tamil nadu

இந்தியாவை மிரட்டும் கரோனா - ஒரே நாளில் 4 ஆயிரத்தை எட்டும் மரணங்கள்!

By

Published : May 7, 2021, 10:59 AM IST

ஒரே நாளில் நான்கு லட்சத்து 14 ஆயிரத்து 188 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

COVID-19
கரோனா

இந்தியாவில் கடந்த சில நாள்களாகக் கரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நான்கு லட்சத்து 14 ஆயிரத்து 188 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த எண்ணிக்கை 2 கோடியே 14 லட்சத்து 91 ஆயிரத்து 598ஆக அதிகரித்துள்ளது.

குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில் அதிகளவிலான கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதேபோல், நேற்று (மே.6) கரோனாவால் பாதிக்கப்பட்ட 3,915 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 34 ஆயிரத்து 083 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியே 76 லட்சத்து 12 ஆயிரத்து 351ஆக உள்ளது. தற்போது, 36 லட்சத்து 45 ஆயிரத்து 164 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுவரை மொத்தமாக 16 கோடியே 49 லட்சத்து 73 ஆயிரத்து 58 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details