நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 14 ஆயிரத்து 849 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 155 பேர் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர்.
கோவிட் - 19 நிலவரம்
இந்தியாவில், இதுவரை ஒரு கோடியே ஆறு லட்சத்து 54 ஆயிரத்து 533 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 408 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 339 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.