தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 5, 2021, 2:54 PM IST

ETV Bharat / bharat

இந்தியாவில் 1.08 கோடியை தாண்டிய கரோனா பாதிப்பு

டெல்லி: நேற்று (பிப்.4) மட்டும் 12 ஆயிரத்து 408 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், நாட்டில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 கோடியே 8 லட்சத்து 2 ஆயிரத்து 591 ஆக அதிகரித்துள்ளது.

டெல்லி
டெல்லி

நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 12 ஆயிரத்து 408 பேர் மட்டுமே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல், கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 120 ஆக உள்ளது

இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 கோடியே 8 லட்சத்து 2 ஆயிரத்து 591 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 54 ஆயிரத்து 823 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 1 கோடியே 4 லட்சத்து 96 ஆயிரத்து 308 ஆக உள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக 2 லட்சத்துக்கும் குறைவாக தான் இருந்து வருகிறது.

இதுவரை மொத்தமாக 19 கோடியே 99 லட்சம் நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று மட்டும் சுமார் 7 லட்சத்து 15 ஆயிரம் பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:மியான்மரில் பேஸ்புக் முடக்கம்

ABOUT THE AUTHOR

...view details