தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 16, 2021, 11:37 AM IST

ETV Bharat / bharat

இந்தியாவில் மீண்டும் குறையும் கரோனா பாதிப்பு

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 35 ஆயிரத்து 909 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக ஒன்றிய சுகாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா பாதிப்பு
கரோனா பாதிப்பு

கரோனா தொற்றால் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 32 ஆயிரத்து 937 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 22 லட்சத்து 25 ஆயிரத்து 513ஆக அதிகரித்துள்ளது.

நேற்று (ஆக.15) மட்டும் 35 ஆயிரத்து 909 பேர் குணமடைந்த நிலையில் மொத்தமாகக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 14 ஆயிரத்து 11 ஆயிரத்து 924ஆக உள்ளது. தற்போது 3 லட்சத்து 81 ஆயிரத்து 947 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர்.

கரோனா தொற்றால் பாதித்தவர்களில் 417 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 31 ஆயிரத்து 642ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை நாட்டில் மொத்தம் 54 கோடியே 58 லட்சத்து 57 ஆயிரத்து 108 கரோனா டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:புல்வாமாவில் மூவர்ண கொடி ஏற்றிய புர்கான் வானி தந்தை!

ABOUT THE AUTHOR

...view details