இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை ஓய்ந்து, பொதுமுடக்கம் தளர்வில் உள்ளன. இருப்பினும் கேரளா உள்ளிட்ட சில பகுதிகளில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
இந்நிலையில், வரும் நாள்களில் கரோனா பாதிப்பு எவ்வாறு இருக்கும் என ஐஐடி கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களான வித்யாசாகர், மனீந்திரா அகர்வால் ஆகியோர் ஆய்வு நடத்தி அதன் விவரங்களை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, ஆகஸ்ட் மாத மத்தியில் இந்தியாவில் கரோனா பாதிப்பு மீண்டும் தலைதூக்கும் எனவும், அதேவேளை இரண்டாம் அலை அளவிற்கு நிலைமை மோசமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.