தமிழ்நாடு

tamil nadu

புதுச்சேரியில் 1,445 பேருக்கு கரோனா!

By

Published : May 22, 2021, 2:36 PM IST

புதுச்சேரியில் இன்று (மே.22) புதிதாக 1,445 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Pondicherry
கரோனா

புதுச்சேரியில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருகின்றது. கடந்த சில நாட்களாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் 25 தாண்டியே இருந்து வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரியில் இன்று (மே.22) புதிதாக 1,445 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 30 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,325ஆக உயர்ந்துள்ளது.

இன்று(மே.22) மட்டும் 2,011 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 94,612 ஆகவும், உயிரிழப்பு 1,325 ஆகவும் உயர்ந்துள்ளது. இதுவரை 75,947 பேர் குணமடைந்துள்ளனர்.

புதுச்சேரி கரோனா தொற்று அட்டவணை

அதேசமயம், நேற்று(மே.21) ஒரே நாளில் 2,308 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதுவரை புதுச்சேரியில் 2 லட்சத்து 39 ஆயிரத்து 301 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details