தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'799 ஆசிட் தாக்குதலுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை' - கேள்வி ஏழுப்பும் என்.சி.டபுள்யு! - இந்தியா ஆசிட் தாக்குதல் வழக்குகள்

டெல்லி: நாடு முழுவதும் பதிவாகியுள்ள 1,273 ஆசிட் தாக்குதல் வழக்குகளில் 799 நபர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை என தேசிய மகளிர் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.

ncw
ncw

By

Published : Nov 22, 2020, 7:59 PM IST

தேசிய மகளிர் ஆணையம் சார்பில் 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நோடல் அலுவலர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் மெய்நிகர் சந்திப்பு நடைபெற்றது. இது ஆணைக்குழுவின் மேலாண்மை தகவல் அமைப்பின் (எம்ஐஎஸ்) இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட ஆசிட் தாக்குதல் வழக்குகளை மறுஆய்வு செய்து விவாதிக்கும் கூட்டமாகும். ஆய்வு செய்ததில் பதிவான 1, 273 ஆசிட் தாக்குதல் வழக்குகளில் 799 நபர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது

இது குறித்து பேசிய தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா, "அக்டோபர் 20ஆம் தேதி வரையிலான தரவுகளின்படி, நாடு முழுவதும் 1,273 ஆசிட் தாக்குதல்களில் 474 வழக்குகளுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 799 வழக்குகளை யாரும் கண்டுகொள்ளவில்லை. இத்தகைய பாதிப்புகளுக்கு ஆளான நபர்களுக்கு உதவுவது நோடல் அலுவலர்களின் கடமையாகும். குற்றச்சம்பவத்தின் பாதிப்பை பொறுத்து 3 லட்சம் முதல் 8 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படுகிறது" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "நமது தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளுக்கும், காவல் நிலையங்களில் பதிவாகியுள்ள வழக்குகளின் எண்ணிக்கையிலும் மாற்றம் உள்ளதால் இந்த தரவுகளின் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. மீண்டும் வழக்குகளின் எண்ணிக்கை சம்பந்தப்பட்ட அலுவல்கள் சரிபார்க்க வேண்டும். மேலும், இவ்விவகாரம் தொடர்பாக நோடல் அலுவலர்களை நியமிக்காத மாநிலங்களில், தலைமை செயலரிடம் இப்பிரச்னையை முன்வைத்துள்ளோம். விரைவில் பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களுக்கும் இழப்பீடு தொகை வழங்கிட வேண்டும். இத்தகைய வழக்குகளை பதிவு செய்வதில் எந்தவிதமான கால தாமதம் ஏற்படக்கூடாது" எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

மேலும், சிக்கிம், தமிழ்நாடு, கோவா (வடக்கு மாவட்டம்), ஜம்மு-காஷ்மீர், தாதர் மற்றும் நகர் ஹவேலி, தமன் மற்றும் டியு ஆகிய மாநில / யூனியன் பிரதிநிதிகள் 2020ஆம் ஆண்டில் ஆசிட் தாக்குதல் வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை எனக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details