தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 3, 2021, 5:13 PM IST

ETV Bharat / bharat

கோயில் குளத்தை பாதுகாக்க வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

கருவடிக்குப்பம் பிள்ளையார் கோயில் குளத்தை பாதுகாக்க வலியுறுத்தி, கம்யூனிஸ்ட் கட்சியினர் பொதுமக்களைத் திரட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோயில் குளத்தை பாதுகாக்க வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
கோயில் குளத்தை பாதுகாக்க வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி கருவடிக்குப்பம் பிள்ளையார் கோயில் குளம், கட்டுமானப் பொருள்கள், கழிவுப் பொருள்கள் கொட்டி மூடிய நிலையில் இருப்பதைக் கண்டு, ஊர் பொதுமக்களுடன் உழவர்கள் நகராட்சி ஆணையரிடம் புகார் மனு அளித்தனர்.

ஆனால், எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இதனால், இன்று (ஆக 03) கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், ஊர் மக்களுடன் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கோயில் குளத்தை பாதுகாக்க வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

மேலும், புதுச்சேரி நகரிலுள்ள கோயில் குளங்கள் எப்படி பராமரிக்கப்பட்டு வருகின்றதோ, அதேபோல் இந்தக் குளத்தை பராமரிக்க வேண்டும் என்று இதில் வலியுறுத்தப்பட்டது.

இதையும் படிங்க: 'தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் இல்லை - மத்திய அரசு திட்டவட்டம்'

ABOUT THE AUTHOR

...view details