கடந்த ஜூன் மாதம், லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன ராணுவ வீரர்களிடையே மோதல் நிகழ்ந்தது. இதில், தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த கர்னல் சந்தோஷ் பாபு உள்பட 20 வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில், ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் இரண்டாவது உயரிய விருதான மகா வீர் சக்ரா, சந்தோஷ் பாபுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, விருதுக்கு அவரின் பெயரை ராணுவ உயர் மட்ட அலுவலர்கள் பரிந்துரைத்தனர்.