தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆந்திராவில் அனல் பறக்கும் சேவல் சண்டை.! கோடிக் கணக்கில் பந்தய தொகை.? - ஆந்திரா

ஆந்திரப் பிரதேசத்தில் சேவல் சண்டை வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது.

சேவல் சண்டை
சேவல் சண்டை

By

Published : Jan 16, 2023, 10:10 AM IST

அமராவதி:ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் சங்கராந்தி பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையை முன்னிட்டு பல பகுதிகளில் சேவல் சண்டை நடத்தபட்டது. இந்த போட்டிகளில் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் தலைவர்கள் நேரடியாக தலையிட்டு, சேவல் சண்டையை நடத்தியதாக கூறப்படுகிறது.

அதோடு பல கோடி ரூபாய் பந்தயம் கட்டப்பட்டு சூதாட்டம் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சொல்லப்போனால், பணம் எண்ணும் எந்திரம், சிசிடிவி, மது விற்பனை, அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க பலத்த பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் இந்த சேவல் சண்டை போட்டி நடத்தப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் முழுவதும் கோதாவரி, கிருஷ்ணா மற்றும் குண்டூர் பகுதிகளில் சேவல் சண்டை வெகு விமர்சையாக நடந்துள்ளது. காக்கிநாடா, கோனாசீமா, கிழக்கு கோதாவடி, மேற்கு கோதாவரி மற்றும் எலுரு மாவட்டங்களில் பல நூறு கோடி வரை சேவல் சண்டை மூலம் கைமாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோதாவரி மாவட்டத்தில் போகி தினத்தன்று நடந்த சேவல் சண்டையில், சுமார் 400 கோடி ரூபாய் வரை கை மாற்றப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. கிருஷ்ணா மாவட்டத்தில் நடத்தப்பட்ட சேவல் சண்டையில் வெற்றிபெற்றவர்களுக்கு புல்லட் வண்டி மற்றும் ஸ்கூட்டிகள் பரிசாக வழங்கப்பட்டுள்ளன.

இன்றும் (ஜன 16) ஆந்திர மாநிலத்தில் பல பகுதிகளில் சேவல் சண்டை நடைபெற்று வருகிறது. அதில் ஹைதராபாத், சென்னை, நெல்லூர், விஜயவாடா ஆகிய இடங்களில் இருந்து பந்தயம் கட்டுபவர்கள் வருகை புரிந்துள்ளனர். இதற்காக, பிரத்யேக ஸ்டால்கள் அமைக்கப்பட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுவருகின்றன.

சேவல் சண்டை அமைப்பாளர்கள் தொலை தூரத்தில் இருந்து வரும் பந்தையகாரர்களுக்கு தங்குவதற்கு அறைகள் ஏற்பாடு செய்துள்ளனர். இதில், சில வீடுகள் விருந்தினர் மாளிகையாக மாற்றப்பட்டுள்ளது.

இதையும் படங்க: பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்குகிறது

ABOUT THE AUTHOR

...view details