இந்தியா - அமெரிக்கா தூய எரிசக்தி இலக்கு என்ற பெயரில் இரு நாடு இணைந்து கால நிலை மாற்றம் தொடர்பாக கருத்தரங்கை ஏற்பாடு செய்தது. இதில் இந்தியா சார்பில் ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவும் அமெரிக்கா சார்பில் சிறப்பு தூதர் ஜான் கெர்ரி ஆகியோர் பங்கேற்று பேசினர்.
இந்த நிகழ்வில் அமைச்சர் பூபேந்தர் யாதவ் பேசியதாவது, 'இந்த கருத்தரங்கு இரு நாட்டின் கூட்டுறவை பறைசாற்றுவதுடன் கால நிலை மாற்றம் குறித்து இரு நாடுகளின் செயல்பாடுகளையும் உலகிற்கு காட்டுகிறது.
புவி வெப்பத்தை 1.5 டிகிரிக்கு குறைவாக வைத்திருப்பது உலக நாடுகளின் கடமை. அப்போதுதான் வெள்ளம், காட்டுத்தீ, வறட்சி போன்ற பேரிடர்களை நாம் தவிர்க முடியும்.