தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி-மீரட் திட்டத்திற்கு சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம் - ரயில் சுரங்கப்பாதை அமைப்பதற்காக திட்டம்

நியூ அசோக் நகர், ஷஹிபாபாத் இடையே ரயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்கு என்சிஆர்டிசி சீனாவின் நிறுவனத்துடன் ஒப்பந்தம் புரிந்துள்ளது.

டெல்லி-மீரட் திட்டத்திற்கு
டெல்லி-மீரட் திட்டத்திற்கு

By

Published : Jan 4, 2021, 5:42 PM IST

டெல்லி:டெல்லி-மீரட் திட்டத்தின் கீழ், புதிய அசோக் நகர் முதல் ஷஹிபாபாத் இடையே 5.6 கிலோமீட்டர் தூரம் வரை நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு, தேசிய தலைநகர் பிராந்தியப் போக்குவரத்து கழகம் (NCRTC) சீனாவைச் சேர்ந்த ஷாங்காய் டன்னல் இன்ஜினியரிங் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் புரிந்துள்ளது. இதன் மூலம் டெல்லியிலிருந்து சாலை வழியாக மீரட் செல்வதற்கான பயண நேரம் நேரம், மூன்று மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரத்திற்கு குறைவாக குறையும்.

அனைத்து நெறிமுறைகள், வழிமுறைகளைப் பின்பற்றியே இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக, நாட்டின் முதல் பிராந்திய அதிவேக ரயில் சேவைக்கானப் பணியை மேற்கொண்டு வரும் தேசிய தலைநகர் பிராந்தியப் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

திட்டத்தின் நெறிமுறைகளின்படி அனைத்து ஏஜென்ஸிகளிலிருந்து நிதி பெறும் நிறுவனத்திற்கே ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சுமார் 82 கிலோ மீட்டர் தூரத்திற்கு டெல்லி-காசியாபாத்-மீரட் இடையே வழித்தடம் அமைப்பதற்கான ஒப்பந்தம் அளிக்கப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதையும் படிங்க:காவலரான மகளுக்கு சல்யூட் அடித்த தந்தை

ABOUT THE AUTHOR

...view details