புதுச்சேரி:குடியரசுத்தலைவர் தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த திரெளபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஸ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான திரௌபதி முர்மு, வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
அந்த வகையில், புதுவை மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக அவர் புதுச்சேரிக்கு வந்துள்ளார். தனியார் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுச்சேரியில் உள்ள என். ஆர். காங்கிரஸ், பாஜக, அதிமுக மற்றும் கூட்டணிக்கட்சிகள் கலந்து கொண்டு திரௌபதி முர்முவிற்கு ஆதரவு அளிப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத்தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு பங்கேற்று உரையாற்றினார்.