தமிழ்நாடு

tamil nadu

மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி புறக்கணிப்பு - முதலமைச்சர் நாரயணசாமி

By

Published : Feb 2, 2021, 4:39 PM IST

புதுச்சேரி: மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி புறக்கணிக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

chief
chief

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியர்களை சந்தித்தார். அப்போது, “தற்போது நாட்டில் 9.5% பணவீக்கம் உள்ளது. உலகில் எந்த நாட்டிலேயும் இது போன்ற பணவீக்கம் கிடையாது. சிறுதொழில் மற்றும் நடுத்தர தொழில் செய்பவர்களுக்கு எந்த ஒரு அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை. அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லாததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தற்போது காணொலி மூலம் மாணவர் பாடம் பயின்று வரும் நிலையில் மாணவர்களுக்கு என ஒரு திட்டத்தை அறிவித்து இருக்க வேண்டும். ஆனால் அறிவிக்கவில்லை, இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நமது அண்டை நாடாக உள்ள சீன நாடு 200 பில்லியன் டாலரை ராணுவத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளது.

ஆனால் கடந்த ஆண்டு ஒதுக்கிய நிதியை தற்போது போடப்பட்டுள்ள பட்ஜெட்டில் ஒதுக்கி உள்ளது. ராணுவத்தை நவீனப்படுத்தி இருக்க வேண்டும். அதற்கான வாய்ப்புகளை வழங்கவில்லை. வங்கிகளை தனியார் மையமாக்கும் வேலையை மத்திய அரசு செய்து வருகிறது. சாதாரண மக்களுக்கு எந்த ஒரு பயனும் கிடைக்காது. அதனால் தனியார் மையமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.

தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவித்துள்ள நிலையில் எந்த ஒரு புதிய திட்டமும் புதுச்சேரி மாநிலத்திற்கு அறிவிக்கப்படவில்லை. மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி புறக்கணிக்கப்பட்டுள்ளது. பாஜக தேசிய தலைவர் நட்டா புதுச்சேரிக்கு வந்த போது அதிக நிதி அளிப்போம்.

மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளை திறப்போம் என்று அறிவித்து இருந்தார். ஆனால் நேற்றைய பட்ஜெட்டில் புதுச்சேரிக்கு அறிவிப்பு இருக்கும் என நினைத்தோம். ஆனால் ஒரு அறிவிப்பும் இல்லை. மத்தியில் உள்ள பாஜக அரசு புதுச்சேரியை புறக்கணிக்கின்றது” எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details