தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 16, 2021, 6:51 PM IST

ETV Bharat / bharat

’நாள்தோறும் தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கை குறைவது ஏன்...’ - ப சிதம்பரம் கேள்வி

நாள்தோறும் தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை குறைவது ஏன் என மத்திய அரசுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Chidambaram
Chidambaram

இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் திட்டம் மூன்றாம் கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அரசின் தடுப்பூசி திட்டம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”ஒவ்வொரு நாளும் தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கை குறைந்துவருவது ஏன்? கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி ஒரே நாளில் 42 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நிலையில், நேற்று (மே.15) 11.60 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளன.

தடுப்பூசி தட்டுப்பாடாக உள்ளது என்பதுதான் இதற்கு ஒரே காரணம். ஆனால், விஸ்வாசமுள்ள மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் தட்டுபாடே இல்லை என்றுதான் கூறுவார்” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் இதுவரை 18.22 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. 14.05 கோடி பேருக்கு முதல் டோஸும், 4.16 கோடி பேருக்கு இரண்டு டோஸ்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:'என்னையும் கைது செய்யுங்கள்': போஸ்டர் விவகாரத்தில் சவால்விடும் ராகுல்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details