தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'தடுப்பூசி விலையைக் குறைங்க' - மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் - கோவிட்-19 தடுப்பூசி விலை

கோவிட்-19 தடுப்பூசி விலையை மிகக்குறைந்த விலையில் விற்கக் கோரி சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் கோரிக்கைவைத்துள்ளார்.

சத்தீஸ்கர் முதலமைச்சர்
சத்தீஸ்கர் முதலமைச்சர்

By

Published : Apr 25, 2021, 12:40 PM IST

நாடு முழுவதும் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதையடுத்து கோவிஷீல்டு, கோவாக்சின் நிறுவனங்கள் தடுப்பூசிக்கான விலையை நிர்ணயித்துள்ளன. இதற்குப் பல்வேறு மாநில அரசுகள் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றன.

இது தொடர்பாக சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

அதில், "சீரம் நிறுவனம் இதுவரை ஒரு டோஸ் தடுப்பூசியை ரூ.150-க்கு வழங்கிவந்த நிலையில், அதை தற்போது மாநில அரசுகளுக்கு ரூ.400ஆக உயர்த்தியுள்ளது.

நாடு முழுவதும் கோவிட்-19 தீவிரமாக அதிகரித்துவரும் நிலையில், இந்த விலை உயர்வு மக்களுக்கு கூடுதல் சுமையாகும். எனவே, மத்திய அரசு அத்தியாவசிய மருந்துகள் விலை கட்டுப்பாட்டு கொள்கை அடிப்படையில், தடுப்பூசிக்கான விலையைக் குறைத்து நிர்ணயிக்க வேண்டும்.

இதுவே இந்தியாவின் தடுப்பூசி திட்டத்தை துரிதமாக மேற்கொள்ள சரியான வழி" எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:ஏப்ரல் 28ஆம் தேதிமுதல் தடுப்பூசி பதிவு தொடக்கம் - மத்திய அரசு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details