தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அகங்காரத்தை விடுத்து விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் மோடி - ஆம் ஆத்மி ராகவ் சத்தா - Protest aginst farm laws

மத்திய அரசு தனது அகங்காரத்தை விடுத்து, வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் ராகவ் சத்தா தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் ராகவ் சத்தா
ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் ராகவ் சத்தா

By

Published : Dec 22, 2020, 3:16 PM IST

டெல்லி:மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த சில வாரங்களாக, டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மத்திய அரசு வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் ராகவ் சத்தா வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், "மத்திய அரசு தனது அகங்காரத்தை விடுத்து, விவசாயிகளின் கோரிக்கைக்கு ஒப்புதல் தெரிவிக்க வேண்டும். இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைப்பது போல் தெரியவில்லை. எனவே மூன்று கருப்பு சட்டங்களையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மோடி அரசு விவசாயிகளுடன் ஈகோ பிரச்னையில் ஈடுபட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கை நியாயமானது" என்றார்.

இதையடுத்து இங்கிலாந்தில் பரவி வரும் வீரியம் மிக்க புதிய வகை கரோனா தொடர்பாக பேசிய அவர், "கடந்த காலத்தில் கிடைத்த அனுபவம், கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இங்கிலாந்தில் இருந்து வரும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்ய வேண்டும். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இதே கோரிக்கையினை வைத்துள்ளார். இதில் ஒரு நாள் தாமதம் செய்தாலும் கூட கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்" என்றார்.

இதையும் படிங்க:புதிய வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது - மத்திய இணையமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details