தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 27, 2021, 6:18 PM IST

ETV Bharat / bharat

வங்கிக் கணக்குகளை முடக்கிய மத்திய அரசு - மம்தா குற்றச்சாட்டு

அன்னை தெரசா மிஷினரி தொண்டு நிறுவனத்தின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் மத்திய அரசு முடக்கியதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Missionaries of Charity update  Mamata Banerjee on Missionaries of Charity  Centre has frozen bank accounts of Missionaries of Charity  வங்கிக் கணக்குகளை முடக்கிய ஒன்றிய அரசு  ஒன்றிய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு  மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி  அன்னை தெரசா மிஷினரி சேவை
Mamata Banerjee

கொல்கத்தா: 1950ஆம் ஆண்டு மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி அமைப்பை, அன்னை தெரசா கொல்கத்தாவில் தொடங்கினார். இந்த அமைப்பின் மூலம் பல்லாயிரக்கணக்கானோர் பயனடைந்துவருகின்றனர்.

ஆனால் கிறிஸ்துமஸ் அன்று மத்திய அரசு இந்தியாவில் உள்ள அன்னை தெரசா தொண்டு நிறுவனத்தின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடக்கியதாகவும், இதனால் 22 ஆயிரத்திற்கும் அதிகமான நோயாளிகள், ஊழியர்கள் உணவு, மருந்துகள் இன்றி தவித்துவருவதாகவும் மம்தா குற்றம் சுமத்தியுள்ளார்.

மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு

இது குறித்து மம்தா அவரது ட்விட்டர் பக்கத்தில், “சட்டம் மிக முக்கியமானது என்றாலும், அதற்காக மனிதாபிமான நடவடிக்கைகளை முடக்குவதை ஏற்க முடியாது” எனப் பதிவிட்டிருந்தார்.

இதையும் படிங்க: தெலங்கானா - சத்தீஸ்கர் எல்லையில் துப்பாக்கிச்சூடு - 6 மாவோயிஸ்ட் உயிரிழப்பு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details