இந்தியாவில் நிலவிவரும் கரோனா இரண்டாம் அலை குறித்து மத்திய சுகாதாரத்துறை ஆய்வு கூட்டம் நடத்தியது. மேலும் பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களைச் சேர்ந்த அரசு உயர் அலுவலர்களிடம் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்திற்கு பின்னர் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் இரண்டாம் நிலை காரணமாக பல்வேறு பகுதிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன. குறிப்பாக சென்னை உள்ளிட்ட நாட்டின் 30 மாவட்டங்கள் கடந்த இரண்டு வாரங்களாக மோசமான பாதிப்பை சந்தித்து வருகின்றன. இந்த மாவட்டங்களில் நோய் பாதிப்பு எண்ணிக்கை இரண்டு வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.