புதிதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டம் எட்டாவது நாளை எட்டியுள்ள நிலையில், விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு இன்று (டிச.03) நான்காம்கட்டப் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இதற்கிடையே, பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், விவசாயிகளின் பிரச்னைகளுக்கு விரைவில் முடிவுகட்ட வேண்டும் என பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங் கோரிக்கை விடுத்துள்ளார். மாநிலத்தின் பொருளாதாரத்திலும் தேசியப் பாதுகாப்பிலும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இப்பிரச்னையில் மத்திய அரசு தனது நிலைபாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.