தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 1, 2021, 4:05 PM IST

ETV Bharat / bharat

தனிநபரின் அனுமதியில்லாமல் புகைப்படம் பயன்படுத்தக் கூடாது - ட்விட்டர் புது விதி

தனிநபர் புகைப்படங்களை அவர்களின் அனுமதி இன்றி பயன்படுத்தக்கூடாது என ட்விட்டர் புதிய விதியை அறிவித்துள்ளது.

Twitter's New Rule
Twitter's New Rule

பிரபல சமூக வலைத்தள நிறுவனமான ட்விட்டர் தனிநபரின் புகைப்படம் மற்றும் காணொலிகளை பயன்படுத்த புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி, தனிபரின் புகைப்படங்கள், காணொலிகளை அவரது அனுமதி இல்லாமல் ட்விட்டரில் பதிவிடக்கூடாது என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் தனியுரிமை தகவல் கொள்கையின் கீழ் இந்த புது விதி அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே முகவரி, தொலைத்தொடர்பு எண், இமெயில் போன்ற தனிநபர் விவரங்களை பதிவிட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புது விதி மூலம் தனியுரிமை கொள்கையை விரிவுபடுத்தியுள்ளது.

சம்பந்தபட்ட தனிநபர் இனி புகார் தரும்பட்சத்தில் அந்த பதிவு நீக்கப்படும் என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, செய்தி ஊடகங்கள் அவை பயன்படுத்திய புகைப்படங்கள், காணொலிகளுக்கு இந்த விதி பொருந்தாது என ட்விட்டர் தெரிவித்துள்ளது. மேலும், இந்த விதி பிரபலங்களுக்கு பொருந்தாது எனவும் ட்விட்டர் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:Ballon d'Or 2021: ஏழாவது முறையாக கோப்பை வென்ற லியோனல் மெஸ்ஸி

ABOUT THE AUTHOR

...view details