திருச்சூர் (கேரளா):கேரள மாநிலம்திருச்சூர் மாவட்டம் கனிமங்கலம் பகுதியில் சென்று கொண்டு இருந்த தனியாா் பேருந்து இன்று காலை விபத்துக்குள்ளானதில் 40 நபா்கள் காயமடைந்துள்ளதாக திருச்சூர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று (ஆகஸ்ட் 18) காலை தனியாா் பேருந்து 50 பயணிகளுடன் திருச்சூர் மாவட்டம் கனிமங்கலம் பகுதி வழியாக செல்லும்போது, தன் முன்பு சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டபோது இந்த விபத்து நடைபெற்றதாகவும், மற்றும் சிலர் சாலையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றதால் பேருந்து ஓட்டுநா் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர்.
தனியாா் பேருந்து விபத்துக்குள்ளான தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேருந்து விபத்தில் காயம் அடைந்த அனைவரையும் அருகில் உள்ள சுகாதார மையங்களுக்கு சிகிச்சைக்காக சர்த்துள்ளனர். இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமின்றி தப்பினர். மேலும், காயமடைந்த 40 நபர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.