தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பச்சிளம்குழந்தையை மாடியிலிருந்து தூக்கி வீசிய குரங்குகள் - குழந்தை உயிரிழப்பு! - குரங்குகள் அட்டூழியத்தால் குழந்தை பலி

குரங்குக் கூட்டம், மூன்றாவது மாடியிலிருந்து தூக்கி வீசியதால், பச்சிளம் குழந்தை உயிரிழந்தது.

bareilly
bareilly

By

Published : Jul 18, 2022, 8:14 PM IST

பரேய்லி: உத்தரப்பிரதேச மாநிலம், பரேய்லி அருகே உள்ள துங்கா கிராமத்தில் வசிக்கும் நிர்தேஷ்(25) என்பவர், தனது மனைவி மற்றும் 4 மாத கைக்குழந்தையுடன் மொட்டை மாடியில் நடந்துகொண்டிருந்தார்.

அப்போது திடீரென குரங்குகள் கூட்டம் அவர்களை சூழ்ந்து கொண்டது. குரங்குகள் தாக்குதல் நடத்த ஆரம்பித்ததும், நிர்தேஷ் கீழே இறங்கிச்செல்ல முயன்றுள்ளார். அப்போது குழந்தை கைகளிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளது. அப்போது குரங்குகள் அந்த குழந்தையைத் தூக்கி மாடியிலிருந்து கீழே வீசியுள்ளன.

மூன்றாவது மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்டதால், குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் இதேபோல் ஏராளமான குழந்தைகள் குரங்குகளால் தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து அலுவலர்கள் சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு செய்து வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: அகமதாபாத்தில் கனமழை - சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்

ABOUT THE AUTHOR

...view details