இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம்(IGNOU) முன்பு, தொலைதூரக்கல்வி மூலம் பி.டெக் மற்றும் பொறியியல் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ பட்டப்படிப்புகளை வழங்கிவந்தது. எனினும், இந்த படிப்புகள் பல்கலைக்கழக மானிய குழுவின் விதிமுறைகளுக்கு மாறாக இருந்ததால், இவை தடை செய்யப்பட்டன.
இந்நிலையில், இந்தப் படிப்புகளில் சேர்ந்து பட்டம் பெற்றவர்களின் சான்றிதழ் செல்லுபடி ஆகுமா என சர்ச்சை கிளம்பியது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2009-10ஆம் கல்வி ஆண்டில் சேர்ந்த மாணவர்களின் பட்டம் செல்லுபடியாகும் என 2018ஆம் ஆண்டு உத்தரவிட்டது.