தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

2 நாள் காத்திருப்பு... ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள்... அடிச்சுத் தூக்கிய சிறப்புப் படை! - crime news

ஒடிசா: ஜலேஸ்வர் பகுதியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளை குற்றத் தடுப்புச் சிறப்புப் படையினர் பறிமுதல்செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

ஒடிசா செய்திகள்
ஒடிசா மாநிலத்தில் பழுப்பு சர்க்கரை கடத்தல்

By

Published : Mar 10, 2021, 7:53 PM IST

Updated : Mar 10, 2021, 10:29 PM IST

ஒடிசாவின் பாலசூர் மாவட்டம் ஜலேஸ்வர் பகுதியில் உள்ள லக்ஷ்மண்நாத் சோதனைச்சாவடியில் அம்மாநில குற்றத் தடுப்புச் சிறப்புப் படை அதிரடி சோதனை மேற்கொண்டு மிகப்பெரிய கடத்தலை தடுத்து நிறுத்தியுள்ளது.

போதைப்பொருள்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்படி, அந்தச் சிறப்புப் படை மேற்கொண்ட சோதனையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் (brown sugar) பறிமுதல்செய்யப்பட்டது.

இது தொடர்பாக ஷேக் முனாஃப் என்ற இளைஞரைக் கைதுசெய்த காவல் துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரித்துவருகின்றனர்.

கடத்தல் குறித்து முன்னதாகவே அறிந்த குற்றத் தடுப்புச் சிறப்புப் படை இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே புவனேஸ்வரிலிருந்து ஜலேஸ்வர் பகுதிக்கு வந்து அங்கு முகாமிட்டு நோட்டமிட்டுவந்தனர்.

தொடர்ந்து இளைஞர் ஷேக் முனாஃப் பிடிபட அவரிடமிருந்து 1.5 கிலோ போதைப்பொருள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சீட்டு மோசடியில் ஈடுபட்ட பாஜக பிரமுகர், மனைவியுடன் கைது!

Last Updated : Mar 10, 2021, 10:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details